திருவண்ணாமலையில் 144 தடை உத்தரவு காரணமாக வேட்டவலம் சாலை திருவண்ணாமலை உள்ள ஜெயம் ஓட்டலில் உணவு பொருட்கள் மலிவு விலையில் விற்கப்படுகிறது.
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் உள்ள திருவண்ணாமலையில் ஜெயம் ஓட்டலில் திருவள்ளுவர் சிலை அருகில் மனிதநேயத்தோடு மக்களுக்கு சேவை மனப்பான்மையோடு மலிவு விலையில் கார்த்திகேயன் என்பவரால் உணவுகள் விற்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தோற்று காரணத்தால் 144 ஊரடங்கு தடை உத்தரவு நாடுமுழுவதும் போடப்பட்டுள்ள தினத்தில் இருந்து இந்த ஓட்டலில் 6ரூபாய்க்கு விற்ற இட்லி தற்போது 2 ரூபாயும் விற்கப்படுகிறது,
அதேபோல் 15 ரூபாய்க்கு விற்ற பூரி தற்போது 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே போல் பரோட்டா,சப்பாத்தி, தோசை ஆகிய விலை 15 லிருந்து 10 ரூபாயாக குறைத்து விற்கப்படுகிறது.
இதைப்பற்றி ஓட்டல் உரிமையாளர் கார்த்திகேயன் கூறுவது எங்கள் இடத்தின் உரிமையாளர் மாத வாடகை வேண்டாம் என்று கூறியுள்ளார் அது சமயம் எங்கள் மாஸ்டர் மற்றும் ஊழியர்கள் உங்களால் முடிந்ததை எங்களுக்கு கொடுங்கள் என்று கூறி உள்ளனர் எனவே எங்களால் இந்த விலையில் தரமான உணவு கொடுக்கப்படுகிறது என இந்த அசாத்தியமான சூழ்நிலையில் எங்களால் முடிந்த உதவி சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு சேவை செய்யப்படுகிறது. மக்களும் மகிழ்ச்சியாக வாங்கி செல்கின்றனர் என்று கார்த்திகேயன் கூறுகிறார்